ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 15 July 2021 3:12 PM GMT (Updated: 15 July 2021 3:12 PM GMT)

வருகிற 19ந்தேதி நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜனாதிபதியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.


புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார்.  இதன்பின்னர் டெல்லி ராஷ்டிரபதி பவனுக்கு இன்று மாலை சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பல்வேறு விசயங்கள் பற்றி பேசினார்.

வருகிற 19ந்தேதி நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.  இந்த நிலையில், கொரோனா 3வது அலை, தடுப்பூசி விவகாரம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர் என கூறப்படுகிறது.


Next Story