வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடுக்கு தடையில்லை- சென்னை ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு


வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடுக்கு தடையில்லை- சென்னை ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு
x
தினத்தந்தி 25 Aug 2021 7:58 AM GMT (Updated: 25 Aug 2021 7:58 AM GMT)

வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை எதிர்த்து 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகளில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு,  வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடுக்கு தடையில்லை. வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது” என்று  உத்தரவிட்டது. மேலும், பிரதான வழக்குகளின் இறுதி விசாரணை செப்டம்பர் 14 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story