ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649-பேருக்கு கொரோனா
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனேஷ்வர்,
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 649- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,16,362 - ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8,098- ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்று பாதிப்புக்கு ஆளானோரில் 103 பேர் குழந்தைகள் ஆவர். குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 15.87 சதவிகிதமாக உள்ளது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6,957- ஆக உள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிய சனிக்கிழமை 60,298 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story