மிசோரத்தில் மேலும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மிசோரத்தில் மேலும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 13 Sep 2021 2:36 AM GMT (Updated: 13 Sep 2021 2:36 AM GMT)

மிசோரம் மாநிலத்தில் மேலும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்வால், 

மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, மிசோரத்தில் மேலும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களில் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 58 ஆயிரத்து 747 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், மிசோரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.

Next Story