ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது; பிரதமர் மோடி கிண்டல்


ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது; பிரதமர் மோடி கிண்டல்
x
தினத்தந்தி 18 Sep 2021 10:19 AM GMT (Updated: 18 Sep 2021 10:19 AM GMT)

ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இங்கு ஒரு கட்சிக்கு (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது என பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

புதுடெல்லி, 

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இதன் பலனாக நேற்று ஒரே நாளில்  2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டது.  தடுப்பூசி போட தொடங்கிய நாளில் இருந்து நேற்றுதான் அதிகளவில் போடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

இந்த சாதனை எண்ணிக்கை பிரதமர் மோடியையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் இன்று கோவா மாநில சுகாதார பணியாளர்களுடன் கலந்துரையாடி தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
 
அப்போது அவர், தடுப்பூசி செலுத்துவதில் எதிர்க்கட்சிகள் செய்த அரசியல் விமர்சனத்தையும் சுட்டிக்காட்டி பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ”தடுப்பூசி போட்டால்தான் காய்ச்சல் வரும் என்றார்கள். ஆனால் ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இங்கு ஒரு கட்சிக்கே (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது ” என்றார். 

Next Story