அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்


அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 19 Sep 2021 10:39 AM GMT (Updated: 19 Sep 2021 10:39 AM GMT)

அருணாசல பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இடாநகர்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இன்று பிற்பகல் 3.06 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. 

சங்லாங் மாவட்டத்தில் இருந்து  வட மேற்கு பகுதியில் 70  கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது நிலநடுக்கம் பதிவாகி வருவது கவனிக்கத்தக்கது. 

Next Story