குஜராத்: லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலி
குஜராத்தில் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பை நோக்கி இன்று காலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் 30 பேர் பயணித்தனர்.
சுரேந்திரநகர் மாவட்டம் கன்புரா கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 2 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story