சத்தீஷ்காரில் அரசு பயிற்சி மைய மாற்று திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
சத்தீஷ்காரில் அரசு பயிற்சி மைய மாற்று திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், 5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜாஷ்பூர்,
சத்தீஷ்காரின் ஜாஷ்பூரில் மாற்று திறனாளிகளுக்கான அரசு உதவி பெறும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், போலீசாருக்கு புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நடந்த விசாரணையில், அரசு பயிற்சி மைய மாற்று திறனாளி சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதவிர, சிறுமியுடன் இருந்த 5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இதுபற்றி மையத்தின் சூப்பிரெண்டுக்கு தகவல் தெரிந்து அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக, காப்பக அதிகாரி மற்றும் அந்த காப்பகத்தின் காவலர் என 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி விசாரணை நடத்தும்படி மாவட்ட கலெக்டர் மகாதேவ் காவ்ரே, போலீஸ் சூப்பிரெண்டிடம் கேட்டு கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story