அசாமில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


அசாமில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 Sep 2021 10:57 PM GMT (Updated: 27 Sep 2021 10:57 PM GMT)

அசாம் மாநிலத்தில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாமில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, அசாமில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 1 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.
 
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 362 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அசாமில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 90 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால், அசாமில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.

Next Story