‘குலாப்’ புயல் நாளை மற்றொரு புயலாக உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்


‘குலாப்’ புயல் நாளை மற்றொரு புயலாக உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 29 Sep 2021 9:52 PM GMT (Updated: 29 Sep 2021 9:52 PM GMT)

குலாப் புயல் நாளை மற்றொரு புயலாக உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சமீபத்தில் ‘குலாப்’ புயல், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து அது பலவீனம் அடைந்தது. குறைந்த காற்றழுத்த பகுதியாக தெற்கு குஜராத் பிராந்தியத்தில் நேற்று நிலை கொண்டது.

மேற்கு-வடமேற்காக நகர்ந்து, இன்று (வியாழக்கிழமை) அரபிக்கடலுக்குள் நுழைகிறது. அத்துடன், மேலும் தீவிரமடைந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றொரு புயலாக உருவெடுக்கிறது. தொடர்ந்து, மேற்கு-வடமேற்காக பாகிஸ்தானை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.

Next Story