ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ஆலோசனை
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து இருப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2021-ம் ஆண்டு மட்டும் இதுவரை 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story