கேரளாவில் மேலும் 7,643 பேருக்கு கொரோனா தொற்று - 77 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,643- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,643- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 10,488- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 80,262- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27,002- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 82,408- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் அதிகபட்சமாக திரிசூர் மாவட்டத்தில் 1,017- பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story