உத்தரபிரதேசம்: மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது


உத்தரபிரதேசம்: மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2021 7:16 PM GMT (Updated: 20 Oct 2021 7:16 PM GMT)

உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார் 20 பகுதியில் நேற்று இஸ்லாமிய மதத்தின் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது, நடைபெற்ற ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

அந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் சிலர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் சிலர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷம் எழுப்பும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. 

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மத ஊர்வலத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷம் எழுப்பிய சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிட்ம போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story