ஒடிசாவில் மேலும் 447- பேருக்கு கொரோனா- 4 பேர் உயிரிழப்பு


ஒடிசாவில் மேலும் 447- பேருக்கு கொரோனா- 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Oct 2021 10:38 AM GMT (Updated: 24 Oct 2021 10:38 AM GMT)

ஒடிசாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 500-க்கும் கீழ் தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது அம்மாநில மக்களை சற்று ஆறுதல் அடையச்செய்துள்ளது.

புவனேஷ்வர், 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 447- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும்,  4 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8,309- ஆக உயர்ந்துள்ளது.  இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 447-பேரில் 78- பேர் சிறார்கள் ஆவர். 

ஒடிசாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 500-க்கும் கீழ் தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது அம்மாநில மக்களை சற்று ஆறுதல் அடையச்செய்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 69,161- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் ஞாயிற்றுக்கிழமை தொற்று பாதிப்பு விகிதம் 0.64 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4,542- ஆக உள்ளது.


Next Story