கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா; துணை ஆணையாளர் ஆய்வு


கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா; துணை ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Oct 2021 8:32 AM GMT (Updated: 28 Oct 2021 8:32 AM GMT)

கர்நாடகாவில் 32 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் துணை ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.



குடகு,

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  எனினும், அவர்கள் அனைவருக்கும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.  இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் குடகு மாவட்ட துணை ஆணையாளர் பி.சி. சதீஷ் அந்த பகுதியில் உள்ள பள்ளியொன்றிற்கு நேரில் சென்றார்.  அவருடன் உயரதிகாரிகளும் சென்றுள்ளனர்.  அவர்கள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.


Next Story