தலித் தலைவர்கள் பற்றி சித்தராமையா கீழ்தரமாக பேசுவாா் என எதிர்பார்க்கவில்லை: சி.டி.ரவி


தலித் தலைவர்கள் பற்றி சித்தராமையா கீழ்தரமாக பேசுவாா் என எதிர்பார்க்கவில்லை: சி.டி.ரவி
x
தினத்தந்தி 6 Nov 2021 7:36 PM GMT (Updated: 6 Nov 2021 7:36 PM GMT)

சித்தராமையா தனது சமகால தலித் தலைவர்கள் பற்றி கீழ்தரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. பா.ஜனதாவுக்கு வந்த தலைவர்கள் அதிகாரத்திற்காக வரவில்லை என சி.டி.ரவி கூறியுள்ளார்.

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலித் தலைவர்கள் பற்றி கீழ்தரமான கருத்துகளை தெரிவித்துள்ளார். தலித் தலைவர்கள் தங்களது வயிற்று பிழைப்புக்காக பா.ஜனதாவில் சேருவதாக சித்தராமையா சொல்லி இருக்கிறார். தலித் தலைவர்கள் பற்றி சித்தராமையாவுக்கு இவ்வளவு பெரிய அதிருப்தி இருக்கிறது என்பது தெளிவாகி இருக்கிறது. சித்தராமையா தனது சமகால தலித் தலைவர்கள் பற்றி கீழ்தரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. பா.ஜனதாவுக்கு வந்த தலைவர்கள் அதிகாரத்திற்காக வரவில்லை. பா.ஜனதாவின் கொள்கை, நம்பிக்கையால் வந்தவர்கள்.

உங்களது சமகால தலைவர்களான கோவிந்த் கார்ஜோள், ரமேஷ் ஜிககினகி தற்போது எப்படி பணியாற்றுகிறார்கள்?, அரசியலில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் தலித் தலைவர்கள் பற்றி கீழ்தரமாக பேசுவது தான், அந்த சமுதாயத்தினர் மீது நீங்கள் காட்டும் அக்கறை?. ஜனதா பரிவார் தான் உங்களது அரசியல் வளர்ச்சிக்கு காரணம். அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தீர்கள். தற்போது அந்த கட்சியின் தலைவர்கள் பற்றியே கீழ்தரமாக ஏன் பேசுகிறீர்கள். தலித் தலைவர்களை உங்களது தேவைக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது ஏன்?.

இவ்வாறு சி.டி.ரவி கூறியுள்ளார்.


Next Story