மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்
மணிப்பூரில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் இன்று மதியம் 2.15 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவானது.
மாநில தலைநகர் இம்பால் மற்றும் கிழக்கு இம்பால் பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.
பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளை ஆய்வு செய்யும் நில அதிர்வுக்கான தேசிய மையம் இந்த தகவலை பதிவிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்த துல்லியமான அளவு மற்றும் பூகம்பத்தின் மையப்பகுதி ஆகியன குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ள காக்சிங் பகுதியில் பூகம்பத்தின் மையப்பகுதி அமைந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், பொருட்கள் குலுங்கி கீழே விழுந்துள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story