120 கிலோ போதைப்பொருள் பறிமுதல் :குஜராத் தீவிரவாத தடுப்புப் படை அதிரடி
கடந்த செப்டம்பர் மாதம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 3,000 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
குஜராத்
குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் உள்ள ஜின்ஜுடா கிராமத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள 120 கிலோ போதைபொருளை ( கெராயின்) குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி கூறியதாவது :
போதைப்பொருளை ஒழிப்பதில் குஜராத் காவல்துறை முன்னணியில் இருந்து வருகிறது.குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் சுமார் 100 கிலோ போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.இது குஜராத் காவல்துறையின் மற்றொரு சாதனை.
இவ்வாறு அவர் கூறினார் .
கடந்த செப்டம்பர் மாதம் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 3,000 கிலோ கிராம் போதைப்பொருளை கைப்பற்றிய சில மாதங்களுக்குப் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story