கணவரை உதறிவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண் ஆசிட் வீசி கொலை
மருத்துவமனையில் இரண்டு வாரமாக சிகிச்சை பெற்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புது தில்லி,
டெல்லியின் பவானா பகுதியில் மோன்டு (23) என்ற இளைஞர் திருமணமான பெண்ணிடம், உன்னை விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறி துன்புறுத்தி வந்துள்ளார். பல நாட்களாக இளைஞர் வற்புறுத்திய நிலையில், அந்த பெண் தொடர்ந்து எதிப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மோன்டு அப்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். மோன்டுவை போலீசார் பீகாரில் உள்ள பக்சர் மாவட்டத்தில் கைது செய்தனர்.
தீக்காயங்களுடன் இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று, மோன்டு அந்தப் பெண்ணை வற்புறுத்தி தனது அறைக்கு அழைத்து வந்து மீண்டும் அவளிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். கணவரை விட்டுவிட்டு அவரை திருமணம் செய்து கொள்ள, அவர் மறுத்துள்ளதால் மோண்டு, அப்பெண்ணின் இரு கைகளையும் கட்டிவிட்டு, அவரின் மீது ஆசிட் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். மேலும் அந்த பெண்ணின் கணவரைக் கொல்லவும் மோன்டு திட்டமிட்டு, நாட்டுத் துப்பாக்கியை வாங்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணிற்கு 2011 இல் திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story