காலத்தால் பரிசோதிக்கப்பட்ட ரஷியாவின் நண்பன் இந்தியா - புதின்


காலத்தால் பரிசோதிக்கப்பட்ட ரஷியாவின் நண்பன் இந்தியா - புதின்
x
தினத்தந்தி 6 Dec 2021 1:53 PM GMT (Updated: 6 Dec 2021 1:53 PM GMT)

ரஷியாவின் நண்பன் இந்தியா என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

இந்தியா - ரஷியா இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளனர்.

இரு நாடுகளின் 21-வது உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த மாநாட்டின் போது பேசிய ரஷிய அதிபர் புதின், இந்தியாவை நாங்கள் ஒரு பெரிய சக்தியாக கருதுகிறோம். 

இந்தியா நட்பு நாடு மற்றும் காலத்தால் பரிசோதிக்கப்பட்ட ரஷியாவின் நண்பன் இந்தியா. நமது இரு நாடுகளின் உறவு வளர்ச்சியடைந்து வருகிறது. இது மேலும் வளர்ச்சியடைய நான் விரும்புகிறேன். 

தற்போது, ரஷியாவில் இருந்து கூடுதல் முதலீடு வர உள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான முதலீடு 38 பில்லியனை தொட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ராணுவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாங்கள் பெரிதும் ஒத்துழைக்கிறோம். 

நாம் இணைந்து அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை இந்தியாவில் தயாரிக்கிறோம். பயங்கரவாதம் தொடர்புடைய அனைத்தையும் பற்றி இயற்கையாகவே நாங்கள் கவலைப்படுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பது போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சண்டையுமாகும். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து நாங்கள் கவலைகொள்கிறோம்’ என்றார்.

Next Story