எதிர்க்கட்சிகள் அமளி; மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் அமளி; மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 20 Dec 2021 5:53 AM GMT (Updated: 20 Dec 2021 5:53 AM GMT)

லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், இன்று காலை மாநிலங்களவை கூடியதும் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story