சண்டிகர்: டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!


சண்டிகர்: டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 3 Jan 2022 9:17 PM GMT (Updated: 3 Jan 2022 9:17 PM GMT)

சண்டிகரில் டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

சண்டிகர்,

சண்டிகரின் முக்த்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நவுஷெஹ்ரா பண்ணுவான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது முன்னாள் சென்றுகொண்டிருந்த டிராக்டரின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், டிராக்டரின் பின்னால் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர்  உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story