கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 33.07 சதவிகிதமாக உயர்வு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,946- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,946- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து மேலும் 5,290- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50,904- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 458- ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 69,373- மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 33.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக தலைநகர் திருவனந்தபுரத்தில் 5,863- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 4,100- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 2,043- பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story