அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும்: மத்திய நிதித்துறை இணை மந்திரி


அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும்: மத்திய நிதித்துறை இணை மந்திரி
x
தினத்தந்தி 1 Feb 2022 3:17 AM GMT (Updated: 1 Feb 2022 3:18 AM GMT)

அனைத்து துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்று பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று தொடங்கியது. அதன்படி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார். 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல இந்தியா மீண்டும் வரும் நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில்,  பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது;-  அனைத்து துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும். விவசாய துறை உள்பட அனைத்து துறைகளும் இன்று பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்” என்றார். 


Next Story