சிறுவனை கட்டிப்பிடித்து உதட்டை கடித்த முதியவர் போக்சோவில் கைது...!
சிறுவனை கட்டிப்பிடித்து உதட்டை கடித்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாகி,
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியை சேர்ந்தவர் மம்முகுட்டி என்ற மம்முட்டி (வயது 76). இவர் மாகி பிராந்தியம் பள்ளூர் பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று அங்கு சென்ற முதியவர், வீட்டில் படுத்திருந்த 17 வயது சிறுவனை கட்டிப்பிடித்து உதட்டை கடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினான். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் பள்ளூர் போலீசார் முதியவர் மம்முட்டியை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாகி சிறையில் அடைத்தனர். வயதான முதியவர் சிறுவனை கட்டிப்பிடித்து உதட்டை கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story