வேறு கட்சியில் இணைய போவது இல்லை: அர்வீந்தர் சிங் லவ்லி


வேறு கட்சியில் இணைய போவது இல்லை:  அர்வீந்தர் சிங் லவ்லி
x
தினத்தந்தி 28 April 2024 1:17 PM GMT (Updated: 28 April 2024 2:10 PM GMT)

டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய அர்விந்தர் சிங் லவ்லி, பா.ஜனதாவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியா, டெல்லி காங்கிரஸ் உள்விவகாரத்தில் தலையிடுவதாக கூறி அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜனதா பக்கம் தாவலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், இதை முற்றிலுமாக மறுத்து இருக்கிறார் அர்விந்தர் சிங் லவ்லி. இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் வேறு எந்த கட்சியிலும் சேரப்போவது இல்லை.

காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலை நாட்டவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சினை காரணமாக இல்லை" என்றார்.


Next Story