பணத்தகராறில் விவசாயி குத்தி கொலை; தொழிலாளி கைது


பணத்தகராறில் விவசாயி குத்தி கொலை; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 20 Oct 2022 7:00 PM GMT (Updated: 20 Oct 2022 7:00 PM GMT)

செல்லகெரே அருகே பணத்தகராறில் விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிக்கமகளூரு;


வீடு விற்பனை

சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா சோமகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா (வயது 70). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அந்த வீட்டை அவர் அதே பகுதியை சேர்ந்த ஓபாலப்பா (50) என்பவருக்கு விற்றுள்ளார். இந்த நிலையில் வீட்டை வாங்கிய ஓபாலப்பா, ருத்ரப்பாவுக்கு வீட்டுக்கான பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ருத்ரப்பா, அவரிடம் வீட்டுக்கான பணத்தை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தை கொடுக்காமல் மறுத்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

கத்தியால் குத்தி...

இந்த நிலையில் பணத்தை கேட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்த ஓபாலப்பா நேற்றுமுன்தினம் ருத்ரப்பாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஓபாலப்பா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த ருத்ரப்பாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் ருத்ரப்பா பயங்கர கத்திக்குத்து காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்து ஓபாலப்பா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் செல்லகெரே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கைது

அந்த தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் ருத்ரப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓபாலப்பாவை வலைவீசி தேடிவந்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த ஓபாலப்பாவை ைகது செய்தனர். இதுகுறித்து அவர்மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story