என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான திருத்தப்பட்ட சி.இ.டி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு


என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான திருத்தப்பட்ட சி.இ.டி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
x
தினத்தந்தி 29 Sep 2022 7:00 PM GMT (Updated: 29 Sep 2022 7:00 PM GMT)

என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான திருத்தப்பட்ட சி.இ.டி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடுவதாக கர்நாடக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு;


கர்நாடகத்தில் 2022-ம் ஆண்டுக்கான தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு(சி.இ.டி.) நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சில பிரச்சினைகள் எழுந்தன. மேலும், அதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் திருத்தப்பட்ட சி.இ.டி. தேர்வு முடிவுகளை 29-ந் தேதி(அதாவது) வெளியிட உத்தரவிட்டது.

இந்த நிலையில் கர்நாடக தேர்வாணையம், சி.இ.டி. தேர்வு முடிவுகளை வௌியிடும் தேதியை மாற்றம் செய்துள்ளது. அதன்படி வருகிற 1-ந் தேதி (நாளை) இந்த தேர்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து அடுத்த கட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.


Next Story