விமானத்தின் எமர்ஜென்சி கதவை பாஜக எம்.பி. திறந்த விவகாரம்: விமான போக்குவரத்துறை மந்திரி விளக்கம்


விமானத்தின் எமர்ஜென்சி கதவை பாஜக எம்.பி. திறந்த விவகாரம்: விமான போக்குவரத்துறை மந்திரி விளக்கம்
x

பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி தெரியாமல் அவசரகால கதவை திறந்துவிட்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டதாகவும் இன்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை: சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்த மாதம் 10-ந் தேதி இன்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கர்நாடக மாநில பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட பயணிகள் பயணம் செய்தனர். விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவசர கால கதவு திறக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதனால் விமானம் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. அதே விமானத்தில் பயணம் செய்த தி.மு.க. பேச்சாளர் அரசகுமார் இந்த தகவலை பகிர்ந்தார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் விமானத்தின் அவசரகால கதவு திறந்த விவகாரத்தை டுவிட்டர் பதிவில் வெளியிட்டனர்.

இந்நிலையில் இதுபற்றி இன்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி தெரியாமல் அவசரகால கதவை திறந்துவிட்டதாகவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மன்னிப்பு கேட்டால் போதுமா? இந்த விவகாரத்தை மூடி மறைப்பது ஏன்? ஏன் இது பற்றி விசாரணை நடத்தப் படவில்லை? என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"தவறுதலாகவே எமர்ஜென்சி கதவு திறந்துள்ளது, தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரிவிட்டார் என திருச்சி செல்லும் விமானத்தின் எமர்ஜென்சி கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்த விவகாரத்தில், விமான போக்குவரத்துறை மந்திரி சிந்தியா பதில் அளித்துள்ளார்.


Next Story