ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தில் இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்கக் கோரி புதிய மனு தாக்கல்


ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தில் இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்கக் கோரி புதிய மனு தாக்கல்
x

ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தில் இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்க கோரி கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக, 'ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி முக்தி தளத்தின் தலைவர்' ராஜேஷ் மணி திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தில் இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்கக் கோரி கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மே மாதம் கீழ் கோர்ட்டு உத்தரவுப்படி நடத்திய வீடியோ ஆய்வின் போது, ஞானவாபி மசூதியின் வசூகானா (தொட்டியில்) ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து தரப்பு வாதத்தில் முன்பு கூறியிருந்தனர். ஆனால் இந்த கோரிக்கை முஸ்லிம் தரப்பால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூலை 14-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் 'சிரவண' மாதத்தில் சிவலிங்க பூஜை மேற்கோள்ள அரசியலமைப்பு உரிமையை மேற்கோள் காட்டி மனுவில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஏற்கெனவே வாரணாசி மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும், வாரணாசியில் உள்ள சிவன் கோயிலை இடித்துவிட்டு ஞானவாபி மசூதி கட்டப்பட்டது என்பதை பல்வேறு பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே, ஒரு வழிபாட்டாளராக, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருந்தால், சட்டப்படி விண்ணப்பதாரரின் வழிபாட்டு உரிமைகள் படி, அங்கு போய் வழிபட உரிமை உண்டு என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story