கடபாவில் சகோதரியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


கடபாவில் சகோதரியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 12 July 2023 6:46 PM GMT)

கடபாவில் சகோதரி உறவு முறை கொண்ட சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.

மங்களூரு-

கடபாவில் சகோதரி உறவு முறை கொண்ட சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

சிறுமி பலாத்காரம்

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா கோடிம்பாலா கிராமத்தை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 20). அதேப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி, நிஷாந்துக்கு சகோதரி உறவு முறை ஆவாள். அந்த சிறுமியுடன் நிஷாந்த் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சகோதரி உறவு முறை கொண்ட சிறுமியை, நிஷாந்த் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அந்த சிறுமியை நிஷாந்த் மிரட்டி உள்ளார். இதனால் இதுபற்றி சிறுமி வெளியே யாரிடமும் கூறவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட நிஷாந்த், அடிக்கடி அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

8 மாத கர்ப்பம்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளாள். மேலும் உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை அவளது பெற்றோர், கடபா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள், சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது தான், அண்ணன் உறவு முறை கொண்ட நிஷாந்த் தன்னை சீரழித்த கொடுமையை கூறி சிறுமி கதறி அழுதுள்ளாள்.

வாலிபர் கைது

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடபா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிஷாந்தை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story