இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு: 2,678 பேருக்கு பாதிப்பு


இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு:   2,678 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2022 4:43 AM GMT (Updated: 14 Oct 2022 4:55 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,678 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் கடந்த 12-ந் தேதி (நேற்று முன்தினம்) 2,139 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று (13-ந் தேதி) இந்த எண்ணிக்கை சற்றே கணிசமாக அதிகரித்து 2,786 ஆனது. இன்று இந்த எண்ணிக்கை சற்று குறைந்து 2,678 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,23,997 ஆக உயர்ந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 583 ஆக குறைந்துள்ளது.

தொற்றால் இன்று 10 பேர் உயிரிழந்தனர். இதுவரை இந்த தொற்றால் 5 லட்சத்து 28 ஆயிரத்து 857 பேர் பலியாகி உள்ளனர். இதில் மூன்று பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்.

நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,68,557 ஆக பதிவாகி உள்ளது.

குணமடைந்தோரின் விகிதம் 98% ஆக அதிகரித்துள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1% ஆக உள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 2,19,21,33,244 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,93,963 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது


Next Story