காவிரி விவகாரம் குறித்து இன்று கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம்


காவிரி விவகாரம் குறித்து இன்று கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம்
x

கோப்புப்படம்

காவிரி விவகாரம் குறித்து இன்று கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

பெங்களூரு,

டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்தநிலையில், காவிரி நீர் விவகாரம் குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி அவசர கூட்டம் தனது தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் இன்று (புதன்கிழமை) பகல் 12.30 மணிக்கு நடைபெறும் என்று அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.


Next Story