நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் முன்னிலையில் திடீரென இயற்கை உபாதையை கழித்த ஆசாமி


நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் முன்னிலையில் திடீரென இயற்கை உபாதையை கழித்த ஆசாமி
x

டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவானில் பயணி ஒருவர் மலம் மற்றும் சிறுநீர் கழித்ததாக கூறி பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 24 ஆம் தேதி ஏஐசி 866 ரக ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்தது. அப்போது நடுவானில் இருக்கை எண் 17எப்- ல் இருந்த பயணி ராம் சிங் என்பவர் விமானத்தில் 9வது வரிசையில் திடீரென இயற்கை உபாதைகளை கழித்தார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் முகம் சுளித்தனர். அந்த நபரின் செய்கையை கண்டு புகார் அளித்தனர்.

இந்த செயலுக்கு விமான பணியாளர்கள் அவருக்கு வாய்மொழியாக எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் விமானியின் கமாண்டிற்கும் நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவர் சம்மந்தப்பட்ட பயணியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

இதையடுத்து பயணி ராம் சிங் என்பவர் மீது இந்திய தண்டனை சட்டம் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 510 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கடந்த ஆண்டு , நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது சக பயணி போதையில் அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story