கேரள அரசு சார்பில் 'ஆன்லைன் டாக்சி' சேவை - அடுத்த மாதம் முதல் அமல்


கேரள அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை - அடுத்த மாதம் முதல் அமல்
x

கேரள அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் அமலாகிறது.

திருவனந்தபுரம்,

தனியார் ஆன்லைன் வாடகை கார் (டாக்சி) சேவையை போல கேரளாவில் அரசு சார்பிலும் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்படுகிறது. 'கேரளா சவாரி' என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த இ-டாக்சி சேவை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் அமலாகிறது.

இது தொடர்பாக மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை மந்திரி சிவன்குட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, 'நாட்டில் ஒரு மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறையாகும். இந்த சேவையை அரசு துறை நடத்துவது ஒருவேளை உலக அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கலாம். முழுமையான பாதுகாப்பான மற்றும் சர்ச்சை இல்லாத பயணம் என்பது கேரளா சவாரியின் வாக்குறுதியாகும்' என்று கூறினார்.

தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ-டாக்சி தொழிலாளர் துறைக்கு இந்த தனித்துவமான சேவை ஒரு உதவிகரமாக இருக்கும் என்றும் மந்திரி கூறினார்.

கேரள அரசின் இந்த முன்னோடி திட்டமான இ-டாக்சி சேவை, மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 17-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.


Next Story