தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:46 PM GMT)

குடும்ப தகராறில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு (தாலுகா) டவுன் சாமலாபுரம் உண்டி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் நவபிரசன்னா (வயது40). இவர் நஞ்சன்கூடுவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நவபிரசன்னாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் தமிழ்நாடு திருப்பூரை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக நவபிரசன்னாவுக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நவபிரசன்னா மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் கடந்த சில நாட்களாக நவபிரசன்னா வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நவபிரசன்னா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நஞ்சன்கூடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நவபிரசன்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நஞ்சன்கூடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நஞ்சன்கூடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story