பெங்களூருவில், கேள்வித்தாள் வெளியானதால் செமஸ்டர் தேர்வு ரத்து


பெங்களூருவில், கேள்வித்தாள் வெளியானதால் செமஸ்டர் தேர்வு ரத்து
x

பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு கேள்வித்தாள் வெளியானதால் தேர்வு ரத்தாகியுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பி.காம் மற்றும் பி.சி.ஏ. மாணவர்களுக்கான கணித தேர்வு நடத்த திட்டமிட்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தேர்வு தொடங்கும் சில மணி நேரத்திற்கு முன்பாக கணித தேர்வு கேள்வித்தாள் வெளியானது. இதை அறிந்த பல்கலைக்கழக பதிவாளர், உடனடியாக பி.காம், பி.சி.ஏ. கணித தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த தேர்வு இன்னொரு நாள் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கேள்வித்தாள் வெளியாக யார் காரணம் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது


Next Story