மதுகுடிப்பது குறித்து உயர் அதிகாரியிடம் புகார் அளித்ததால் ஆத்திரம்: சக போலீசார் 2 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ்...!


மதுகுடிப்பது குறித்து உயர் அதிகாரியிடம் புகார் அளித்ததால் ஆத்திரம்:  சக போலீசார் 2 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ்...!
x

மதுகுடிப்பது குறித்து உயர் அதிகாரியிடம் புகார் அளித்த சக போலீசார் 2 பேரை போலீஸ்காரர் சுட்டுக்கொன்றார்.

ஐஸ்வால்,

மிசோரம் மாநில போலீசில் பணியாற்றி வருபவர் பிமல் கண்டி சுக்மா (வயது 56). இவர் மிசோரம் - அசாம் எல்லையில் உள்ள புர்சப் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியாற்றி வருகிறார். அந்த சோதனைச்சாவடியில் லால்ரவ்லா மற்றும் இந்திரகுமார் ராய் ஆகிய மேலும் 2 போலீசாரும் பணியாற்றி வந்தனர்.

இதனிடையே, பிமல் சுக்மாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதை சக காவலர்கள் இரண்டு பேரும் விமர்சித்து வந்துள்ளனர். மது குடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், பிமல் சுக்மா மது குடிப்பது குறித்து சக போலீசார் 2 பேரும் உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிமல் தன் மீது புகார் அளித்த சக போலீசார் லால்ரவ்லா, இந்திரகுமார் மீது இன்று தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் 2 போலீசாரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட அருகில் இருந்த சக போலீசார் விரைந்து வந்து பிமல் சுக்மாவிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர். மது குடிக்கும் பழக்கம் குறித்து உயர் அதிகாரியிடம் புகார் அளித்ததால் சக போலீசார் 2 பேரை போலீஸ் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story