தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உத்தவ் தாக்கரே திட்டம்


தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட  உத்தவ் தாக்கரே  திட்டம்
x

ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளார்.

புதுடெல்லி,

மராட்டிய அரசியலில் பரபரப்பு திருப்பமாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தான் சிவசேனா கட்சி பெயர், சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. கட்சியின் பெயர், சின்னம் முதல்-மந்திரி ஷிண்டே அணிக்கு சென்று இருப்பது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரேயின் தந்தை பால் தாக்கரேயால் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டு மராட்டியத்தில் கோலோச்சி வந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும், அப்போது வெற்றி எங்கள் கைவசம் வரும் என்றும் உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story