சிவ்ரியில் பெண்களை ரகசியமாக படம் பிடித்த 3 பேர் கைது


சிவ்ரியில் பெண்களை ரகசியமாக படம் பிடித்த 3 பேர் கைது
x

சிவ்ரியில் பெண்களை ரகசியமாக படம் பிடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

சிவ்ரியில் பெண்களை ரகசியமாக படம் பிடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

3 பேர் பிடிபட்டனர்

மும்பை சிவ்ரியில் உள்ள போட்ஹார்ட் ரோடு குடிசை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். இந்த புகாரில் தனது அந்தரங்க வீடியோ ஒன்றை மர்மநபர்கள் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், வீடியோவை எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டு இருந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிவ்ரி பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது29). ஸ்டீபன் (21), சரவணா (23) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரை பிடித்து செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தினர்.

ரகசியமாக வீடியோ பதிவு

இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் குடிசை வீடுகளில் வசிக்கும் பெண்களை ஜன்னல், கதவு இடைவெளி, குளியல் அறை போன்ற இடங்களில் ரகசியமாக செல்போன் மூலமாக ஆபாச படம் பிடித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

இவர்கள் சமூகவலைத்தளத்தில் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story