மின்சாரம் தாக்கி விவசாயி பலி


மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 18 July 2022 11:10 PM IST (Updated: 18 July 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி விவசாயி பலியாகினர். மேலும் 3 எருமை மாடுகளும் செத்தன.

தானே,

தானே மாவட்டம் கல்யாண் தாலுகா சாய் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தாராம் போபி (வயது60). இவர் காலை 10 மணியளவில் எருமை மாடுகளுடன் வயலுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது துரதிருஷ்டவசமாக மின்கம்பி அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி விவசாயி சாந்தாராம் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவர் அழைத்து சென்ற 3 எருமை மாடுகளும் பரிதாபமாக செத்தன. தகவல் அறிந்து சென்ற போலீசார் விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் சாய் கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


1 More update

Next Story