ஐ.பி.எல். சூதாட்டம்; வாலிபர் கைது


ஐ.பி.எல். சூதாட்டம்; வாலிபர் கைது
x

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

நாசிக்,

நாசிக் நகரில் உள்ள கங்காபூர் சாலை பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.பி.எல். கிரிக்கெட்டை வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் கடந்த 17-ந் தேதி அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு குடியிருப்பில் இருந்த குர்விந்தர் சிங் பல்தேவ்சிங்(வயது 28) என்பவர் மும்பை- ஐதாராபாத் ஐ.பி.எல். போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்த ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள 5 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்ட ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர் மீது சூதாட்ட தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story