மும்ராவில் வீடு புகுந்து வாலிபர் கொலை- மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


மும்ராவில் வீடு புகுந்து வாலிபர் கொலை- மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:46 PM GMT)

மும்ரா கவுசா பகுதியில் வீடு புகுந்து வாலிபர் கொலை- மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

தானே,

மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியை சேர்ந்தவர் முகமது வாசித் (வயது 20). இவர் மும்ரா கவுசா பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்த அவரை மர்ம ஆசாமிகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு தப்பி விட்டனர். இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கொன்ற ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story