மாநிலங்களவை எம்.பி. தேர்தல்- சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், சஞ்சய் பவார் நாளை வேட்பு மனு


மாநிலங்களவை எம்.பி. தேர்தல்- சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், சஞ்சய் பவார் நாளை வேட்பு மனு
x

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், சஞ்சய் பவார் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களான பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுதே, விகாஸ் மகாத்மே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம், தேசியவாத காங்கிரசை சேர்ந்த பிரபுல் படேல் மற்றும் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 4-ந் தேதி முடிவடைகிறது.

இந்த பதவிகளுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களவை தேர்தலில் சிவசேனா சார்பில் தானும், சிவசேனாவின் கோலாப்பூர் மாவட்ட தலைவரான சஞ்சய் பவாரும் வியாழக்கிழமை (நாளை) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.


Next Story