சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- முதியவருக்கு ஆயுள் தண்டனை


சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- முதியவருக்கு ஆயுள் தண்டனை
x

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பையை சேர்ந்த 10 வயது சிறுமி. கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி இயற்கை உபாதை கழிக்க சென்றாள். உடன் துணைக்காக சிறுவன் ஒருவனையும் சிறுமி அழைத்து சென்றதாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த 68 வயது முதியவர் சிறுவன், சிறுமி இருவரையும் மிரட்டி வலுக்கட்டாயமாக அருகில் உள்ள மாவு அரவை கடைக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து இருவரையும் அவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.

பின்னர் முதியவர் இருவருக்கும் ரூ.5 கொடுத்து நடந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்க கூடாது என கூறி மிரட்டி அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் வீட்டிற்கு சென்றதும் சிறுமிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் விசாரித்தபோது, அவளுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் போலீசார் முதியவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் முதியவர் மீதான குற்றம் தகுந்த ஆதாரத்துடன் நிரூபணமானது. இதனை தொடர்ந்து முதியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


Next Story