வங்கியில் 5830 கிளார்க் பணி இடங்கள்
வங்கியில் 5830 கிளார்க் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வங்கி பணிகளுக்கான தேர்வை நடத்தும் ஐ.எம்.பி.எஸ். நிறுவனம் சார்பில் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 5830 கிளார்க் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 268 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1-7-2021 அன்றைய தேதிப்படி 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1993 முதல் 1-7-2001 வரையிலான காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் சார்ந்த அடிப்படை பயிற்சி படிப்பையும் முடித்திருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வின்ணப்பிக்க கடைசி தேதி: 1-8-2021. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான நடைமுறைகளை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
Related Tags :
Next Story