செம்பு பாத்திரத்தில் தண்ணீரை குடித்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் சேகரிக்கும் போது அதில் உள்ள தாமிர துகள்கள் கசிந்து விடுகின்றன.இதை குடிக்கும் போது உணவை உடைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
நம் முன்னோர்களால் பழங்காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாத்திரம் இந்த செம்பு பாத்திரங்கள் தான். இதனால் தான் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தார்கள். செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடித்தால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இந்த குளிர்காலத்தில் நீங்கள் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றினால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். அதேபோல, ஆயுர்வேத பரிந்துரையின்படி, உங்கள் தண்ணீர் கிளாஸை செம்பு பாத்திரமாக மாற்றினால் ஆரோக்கியம் மேம்படும்.
ஆயுர்வேதத்தில் கூறப்படும், ஒரு மனித உடலில் உள்ள திரிதோஷங்கள் எனப்படும் கபம், பித்தம் மற்றும் வாதம் சமநிலையில் இருக்கவும், தொற்று நோய்களை தடுப்பதற்கும் செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட தண்ணீரை வெறுமனே குடித்தால் மிகவும் நல்லது.
பொதுவாக கோடைக் காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க மண் பானைகளை பயன்படுத்துவோம். அதேபோல, குளிர்காலம் தொடங்கியவுடன் செம்பு பாத்திரங்களில் மாற்றம் செய்ய வேண்டும். இது மற்ற பாத்திரங்களில் சேமிக்கப்படும் தண்ணீரை விட சுவையாகவும், இனிமையாகவும் இருக்கும். அதனால், அந்த தண்ணீரை பருகிய நபரை லேசாக மற்றும் புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.
இப்படி செம்பு பாத்திரத்தில் வைக்கப்படும் நீர் சிறிது சூடாகவும் இனிமையாகவும் சிறிது காரமாகவும் இருக்கும். அது செரிமானத்திற்குப் பிறகு கடுமையான சுவை மாற்றத்திற்கு உட்படுகிறது.
செம்பு பாத்திரத்தை பயன்படுத்தினால் கிடைக்கும் 7 பலன்கள்:-
1. செரிமான அமைப்பை மேம்படுத்துதல்
2. உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
3. எடை குறைக்க உதவுகிறது
4. கீல்வாதம் , வீக்கமடைந்த மூட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது.
5. இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுவதன் மூலம் இரத்த சோகையை வெல்ல உதவும்.
6. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது
7. இது ஆண்டிமைக்ரோபியல் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது
அதுமட்டுமல்லாமல், புகை மூட்டத்தின் போது உங்கள் கண்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது .
எலுமிச்சை சாறு, உப்பு, ஆக்ஸிஜனேற்றப்படாத சோள மாவு அல்லது பேக்கிங் சோடா ஆகியவற்றால் செய்யப்பட்ட பேஸ்ட்டைப் பயன்படுத்தி செம்பு பாத்திரங்களை எளிதாக சுத்தம் செய்யலாம். மேலும், எலுமிச்சை மற்றும் உப்புக் கலவை அல்லது வினிகர் மற்றும் உப்புக் கலவை போன்றவற்றால் செம்பு பாத்திரங்களை வாரத்திற்கு இரண்டு முறை கழுவ வேண்டும்.
இவ்வாறு பயன்படுத்தினால், உடலில் இருக்கும் கழிவுகள் முறையாக அகற்றப்பட்டு உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் உதவுகிறது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் சேகரிக்கும் போது அதில் உள்ள தாமிர துகள்கள் கசிந்து விடுகின்றன. அதன்பின் இதை குடிக்கும் போது உணவை உடைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
Related Tags :
Next Story