பழுதாகி நின்ற சரக்கு லாரியால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


பழுதாகி நின்ற சரக்கு லாரியால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற சரக்கு லாரியால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற சரக்கு லாரியால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

சரக்கு லாரி

தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்கள் இணையும் கூடலூர் வழியாக சரக்கு லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து வெளிமாநிலத்துக்கு செல்வதற்காக சரக்கு லாரி ஒன்று புறப்பட்டது. தொரப்பள்ளி அருகே லாரியின் செயல்பாட்டை டிரைவர் பரிசோதித்தார். தொடர்ந்து லாரியை திருப்ப முயற்சி செய்தார்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்றவாறு லாரி திடீரென பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து லாரியை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் பழுதை சரி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள், வாகன டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் போலீசார் வராததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இணைந்து பழுதான லாரியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 1 மணி நேர முயற்சிக்குப்பிறகு பழுது சரி செய்யப்பட்டது. அதன்பின்னர் லாரி எடுக்கப்பட்டு, போக்குவரத்து சீரானது.



Next Story