ரூ.1¾ லட்சம் உண்டியல் காணிக்கை


சொரக்குடி அய்யனார் கோவிலில் ரூ.1¾ லட்சம் உண்டியல் காணிக்கை

திருவாரூர்

நன்னிலம்:

நன்னிலம் அருகே உள்ள சொரக்குடி அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கைகள் 4 மாதங்களுக்கு ஒரு முறை அறநிலையத்துறை சார்பில் திறக்கப்பட்டு எண்ணப்படும். அதன்படி நேற்று அறநிலையத்துறை சார்பில் கோவிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு அதில் உள்ள பணம் மற்றும் சில்லறைக்காசுகள் எண்ணப்பட்டது. அதில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 57 இருந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் செயல் அலுவலர் அசோக்குமார், ஆய்வாளர்கள் தமிழ்மணி, ஆரோக்கிய மதன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story