தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது குழந்தை சாவு


தண்ணீர் தொட்டியில் மூழ்கி  1½ வயது குழந்தை சாவு
x

தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது குழந்தை இறந்தது.

ஈரோடு

ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள நசியனூர் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 40). இவருடைய மனைவி ஜான்சி (35). 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அருணாச்சலமும், ஜான்சியும் ஈரோடு திண்டல் வேலன் நகரில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் நடக்கும் கட்டிடத்தில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜான்சி, தான் வேலை பார்க்கும் இடத்திற்கு தனது 1½ வயது மகன் லிங்கேஸ்வரனையும் தூக்கி வந்துள்ளார். மாலையில் லிங்கேஸ்வரனை கட்டுமான பணி நடக்கும் இடத்தில் தனியே விட்டுவிட்டு, ஜான்சி தனது வேலையை கவனித்து வந்தார்.

திடீரென மகனை காணாததை கண்டு ஜான்சி கூச்சலிட்டார். இதனால் அருணாச்சலம் மற்றும் சக தொழிலாளர்கள் குழந்தையை தேடிப்பார்த்தனர். அப்போது, கட்டிடத்தின் கீழ்தளத்தில் உள்ள 5 அடி ஆழமுள்ள நிலத்தொட்டியில் லிங்கேஸ்வரன் மூழ்கி இறந்து கிடந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜான்சியும், அருணாச்சலமும் தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story